Friday, November 26, 2010
படைப்புக் கடவுள்
பிரம்மனே,
கணிப்பொறி உண்டா
உன்னிடத்தில் ?
கணக்கற்ற உருவங்களை
உருவாக்கித் தருகிறாயே!
எத்தனை கோடி முகங்கள்-அதில்
எத்தனை கோடி அகங்கள் !
வடிவமைத்திடும் போது
வல்லவர்களையே ஆக்கு,
பிண்டங்களைப் பிடிக்கும்போது
தண்டங்களைத் தவிர்த்திடு
வாழ்வெனும் வரம்
வனப்பு மிகு கவிதை!
வரம் தருவாயோ ?
வாழ்வு மலர்த்துவாயோ?
வடிவமைக்கும் நீயே பொறுப்பு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment