Friday, October 15, 2010

கல்வியின் சிறப்பு

கல்வியில்லை  என்றாலே  ஏலேலோ   ஐலசா
களர் நிலமே  போலாவாய்   ஏலேலோ   ஐலசா

தரிசு நிலம்  போலாவாய்       ஏலேலோ   ஐலசா
தற்குறியாய்  நீ இருந்தால்    ஏலேலோ   ஐலசா

படிப்பினாலே  நீ உயர்ந்தால்   ஏலேலோ  ஐலசா
பார் போற்ற   வாழலாமே       ஏலேலோ   ஐலசா

தாழ்ந்த  வாழ்க்கை  தனிலேதான்  ஏலேலோ  ஐலசா
தன்னிறைவு  உண்டா?சொல்     ஏலேலோ    ஐலசா

உயர்ந்த  வாழ்க்கை  உண்டானால்  ஏலேலோ ஐலசா
உன்னதமாய்  நீ  வாழ்வாய்     ஏலேலோ  ஐலசா

உயர்ந்த  வாழ்க்கை  பெற்றிடவே  ஏலேலோ  ஐலசா
உயர்கல்வி என்றும்  வேண்டும்   ஏலேலோ  ஐலசா
உயர்கல்வி  என்றும்  வேண்டும்  ஏலேலோ  ஐலசா

No comments: