Saturday, October 2, 2010

தேடல்

                        பட்டியிலிருந்து  வந்து
                        பட்டணம்    சேர்ந்து
                        பட்டம்    பெற்றிட
                       பலப்பலத்   தேடல்

                       சகல    வசதிகளோடும்
                       சந்தோஷப்  பொழுதுகளோடும்
                        சான்றிதழ்    பெற்றிடவே
                        சிலப்பல    தேடல்கள் -பின்

                        தேடித் தேடி  அலுத்த  வேலை
                        திடீரென   வந்த்து -பலப்பல
                       திங்களும்  பார்த்திட்ட  பின்னே

                       வாராதிருந்தாலும்   கூட
                       வாடாதிருந்திருக்கலாமோ?

                        வந்த     வேலையினால்
                        சிந்தை   நொந்துவிட்டது
                        தொடர்கின்றது    தேடல்......

No comments: