Monday, September 13, 2010

ஆட்சி மொழியில் தமிழ்

                       அமுதே  தமிழே, அழகிய  மொழியே
                       எனதுயிரே,சுகம்  தரும்  கவிதைகள்  தா!

                      அன்னையே!தமிழன்னையே ,
                      ஆட்சி  பீடத்தில்  அமர்ந்திட்டு
                      ஆண்டுகள்  ஐம்பது  கண்டாய்
                       ஆற்றல்  தந்து   நின்றாய்!

                      சுந்தரத் தமிழே உனை   வணங்குகிறேன்
                     சுவையோடு சுகமாய்  என்னுள் வாழ்ந்திடு!
                     தரம்  நிறை  தமிழே!தண்டமிழ்க் கவியாகும்
                    வரம்  எனக்குத் தந்திடு!சிரம் தாழ்த்துகின்றேன்!

                    ஆட்சியில்  அமர்ந்தே  ஐம்பதாண்டுகள்-உந்தன்
                    ஆதியோ  ஆயிரமாயிரம்  ஆண்டுகள் !!
                    வாழ்த்த  வார்த்தை இல்லை ,வணங்கிப்  பா
                    பாடுகின்றேன் !வணங்கா முடி  உனக்கு.

2 comments:

Lingeswaran said...

Oru mozhi eppadi namakku annai aagum? Naam pesum tamil mozhiyilaeyae neraiya pira mozhi sorkal kalandhullanavae....Naam pseuvadhu mutrilum thooya taamil illai...allavaa?

Murugeswari Rajavel said...

இந்தியா எப்படி பாரத அன்னை ஆகும் என்று கேட்பதைப் போல் இருக்கிறது உங்கள் கேள்வி,