Wednesday, July 28, 2010

கரை சேரா வைகை நதி

பாரம் சுமந்திடவே
 பாலத்தின் அடியினிலே
பதுங்கிக் கிடந்திடும்
பக்குவம் பெற்ற ஆறு

  

அணையின் கட்டினிலே
அடங்கிக் கிடந்திட்டு
அகத்தை அடக்கிடும்
அனுபவம் பெற்ற ஆறு

காசில்லாக் காரணத்தால்
காலங்கள் கடந்திடினும்
கரையைச் சேர்ந்திடாது
காத்திருக்கும் கன்னி ஆறு

கரை  சேராமலிருப்பது
வைகை மட்டுமல்ல
வாழ்வு  தேடும் பல
வாலிப உள்ளங்களும்!

No comments: