Monday, June 28, 2010

அபரிமிதமான செல்வம்

யார் முன்னுக்கு வர முயன்றாலும் அவர்கட்கு சமூகம் எல்லா வசதிகளையும் வாரி வழங்குவது இன்றைய இந்தியாவில் உள்ள புதியநிலை.கடலோரம் உள்ள வெறும் மணல் உதவாது,பயிரிட நினைக்க முடியாத நிலப்பரப்பில் தொழில் நிறுவனம் வந்தவுடன் ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியாத நிலத்திற்கு லட்ச ரூபாய் விலை வருகிறது.அதுவே ஆரம்பம்.முடிவைநினைப்பதற்கு இல்லை. பணத்தைப் பொறுத்த வரையில் சமூகம் வளர்ந்து பணம் காய்க்கும் மரமாகிவிட்டது.எதற்குப் பஞ்சம் வந்தாலும் இனி பணத்திற்கு பஞ்சம் இல்லை
மனித மனம் திறம் வாய்ந்த்து.அவனுள் ஆயிரம் திறமைகள் மறைந்துள்ளன.அவன் அவற்றை அறிய வேண்டும்.தன் திறமைகளை வெளிக்கொணர அறிவுடை முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அளவு கடந்த செல்வத்தை அவனால் அபரிமிதமாக உற்பத்தி செய்ய முடியும்.
1.பணம் உப்படி உற்பத்தியாயிற்று?பணம் என்றால் என்ன?சமூகத்திற்கு இதுவரை பணத்தால் ஏற்பட்ட சௌகரியங்கள் எவை?பணத்தின் திறன் என்ன?இதுவரை பணம் எப்படிப் பெருகி வந்த்து?என்பவற்றை விவரமாக அறிதல் அவசியம்.இது ஞானம்.
2.ஞானத்தைப் பொருளாக மாற்ற வேண்டும்
3.ஞானத்தை சக்தியால் நிரப்ப வேண்டும்.
4.பணம் அபரிமிதமாகப் பெருகும் என்ற உண்மையை இத்திட்டத்தில் அனுபவமாக காண வேண்டும்.
5.சொந்தமாக ஒரு நல்ல காரியத்தைச் செய்து முழுப் பலன் பெற வேண்டும்.

தவத்திரு.கர்மயோகி அவர்களின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments: