Tuesday, June 22, 2010

நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறை மொழி தானே மந்திரம் என்ப
-தொல்காப்பியம்
கவிதை
மனதிலே கருக்கொண்டு
மழலையாய் மலர்ந்திட்டு
மகிழ்வு தருகிறாய்-மனதில்
மாண்பு சேர்க்கிறாய்
மங்காத பொலிவோடு-மனதில்
மணம் சேர்க்கிறாய்

எண்ணச் சிதறல்கள்
இதயப் பையினில்
வண்ணம் பெற்றிட்டு
வந்திடும் வரம்
பண்ணென மலரும்
பயனுறு கவிதை

No comments: